ஆசிரியைகள் மீது பொய் பாலியல் புகார் - 2 மாணவர்கள் அதிரடி கைது - KALVISEITHI | கல்விச்செய்தி

Tuesday 17 December 2019

ஆசிரியைகள் மீது பொய் பாலியல் புகார் - 2 மாணவர்கள் அதிரடி கைது

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here



சூலூர் பள்ளி முதல்வர்,ஆசிரியைகள் மீது பாலியல் புகார்கூறிய வட மாநில மாணவர்கள் 2பேர் கைது  செய்யப்பட்டனர்.அவர்களது  பெற்றோர் மீதும்வழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளது. கோவைஅடுத்த  சூலூரில் உள்ள கேந்திரவித்யாலயா பள்ளியில் பீகாரைசேர்ந்த அண்ணன், தம்பியான  2பேர் பிளஸ் 1 மற்றும் 9ம் வகுப்புபடிக்கின்றனர்.

இவர்கள் தங்களை பள்ளியின்முதல்வர் மற்றும் 3 ஆசிரியைகள்நிர்வாணப்படுத்தி பாலியல்தொல்லை கொடுத்ததாகபெற்றோருடன் சென்று போலீசில்புகார் செய்தனர். இது தொடர்பாகசூலூர் போலீசார் பள்ளியின் முதல்வர் மற்றும் 3 ஆசிரியைகள்மீது போக்சோ சட்டத்தில்வழக்குப்பதிவு செய்தனர். 

இதனைக் கண்டித்தும்,ஆசிரியர்களுக்கு ஆதரவாகவும்நேற்று முன்தினம் மற்றமாணவர்களும், ெபற்றோரும்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதற்கு ஆதரவுதெரிவித்து கோவை எம்.பி.நடராஜனும்  உள்ளிருப்புபோராட்டத்தில் ஈடுபட்டார்.

 

இந்நிலையில், பள்ளியின்பொறுப்பு  முதல்வர் நாகேந்திரன்,சூலூர் போலீசில் அளித்த புகாரில்  ‘‘2 மாணவர்களும் தொடர்ந்துஒழுங்கீன நடவடிக்கையில்ஈடுபட்டதால் சஸ்பெண்ட்செய்யப்பட்டிருந்தனர்.பெற்றோரின்  தூண்டுதலின்பேரில்பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து,ஆசிரியர்களை பணிசெய்யவிடாமல் தடுத்துள்ளனர்.

எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என கூறப்பட்டிருந்தது். அதன்பேரில் 2  மாணவர்கள்மற்றும் அவர்களது பெற்றோர் மீது3 பிரிவுகளின் கீழ் போலீசார்வழக்குப்பதிவு செய்தனர். பின்னர்2 மாணவர்களும் கைதுசெய்யப்பட்டு கோவையில் உள்ளசிறுவர்  சீர்திருத்த பள்ளியில்சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாகபோலீசார் தொடர்ந்து விசாரித்துவருகின்றனர். இந்த நிலையில்அந்த 2 மாணவர்களின் பெற்றோர்நேற்று கலெக்டர் அலுவலகம்வந்தனர். அவர்கள் நிருபர்களிடம்கூறுகையில், நேற்று முன்தினம்பள்ளிக்கு சென்ற எங்கள் மகன்கள்2 பேரும் திரும்பி வரவில்லை. என்ன ஆனார்கள்? என்பதுதெரியவில்லை என்றனர்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group