தமிழக அரசின் செந்தமிழ்சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககம் தமிழ்மொழியை வளர்ப்பதிலும்,புதிய சொற்களைக்கண்டறிவதிலும் தீவிரமாகஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் நடைமுறைவாழ்க்கையில் கலப்புச்சொற்கள் தவிர்த்து தூயதமிழிலேயே பேசுவோருக்கானபரிசுத் திட்டத்தைஅறிவித்துள்ளது அதன்படிநடைமுறை வாழ்க்கையில்
பிறமொழிக் கலப்பு இல்லாமல்,தூய தமிழிலேயே பேசுவோரில்3 பேரைத் தேர்வு செய்துஅவர்களுக்கு தலா ரூ.5,000பரிசுத் தொகை வழங்கப்படும்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தகுதியுடையோர் sorkuvai.comஎன்ற
இணையதளத்தில்விண்ணப்பத்தை பதிவிறக்கம்செய்ய வேண்டும் என்றும்பூர்த்தி செய்தவிண்ணப்பத்தை ஆகஸ்ட் 15-ம்தேதிக்குள் அனுப்ப வேண்டும்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் போது,நாடறிந்த தமிழ்ப் பற்றாளர்கள்இருவரிடையே தமது தமிழ்ப்பற்றை உறுதி செய்து,சான்றிதழ் பெற்றுவிண்ணப்பிக்க வேண்டும்என்றும், சான்றிதழ்தருவோரின் சுயவிவரக்குறிப்பையும் இணைத்துதபால் மூலம் விண்ணப்பிக்கவேண்டும் என்றும் அகரமுதலித் திட்ட இயக்ககம்அறிவித்துள்ளது
No comments:
Post a Comment