ட்ரோன்கள் பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்திய முதல் நாடு இந்தியாதான் என்று மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் இந்திய மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், ஒருபக்கம் வெட்டுக்கிளிகள் படையெடுப்பும் பெரும் சவாலாக அமைந்துள்ளது. கொரோனாவால் ஏற்கனவே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் வெட்டுக்கிளிகளால் பயிர்கள் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் ஹரியானா மாநிலம் குருகிராமில் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன.
No comments:
Post a Comment