நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் மாணவர் இர்பான் கைது செய்யப்படவில்லை என சிபிசிஐடி விளக்கம் அளித்துள்ளது. - KALVISEITHI | கல்விச்செய்தி

Tuesday, 8 October 2019

நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் மாணவர் இர்பான் கைது செய்யப்படவில்லை என சிபிசிஐடி விளக்கம் அளித்துள்ளது.

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில், வேலூரை சேர்ந்த மாணவர் இர்பானின் தந்தை ஷபியை, நேற்று போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மாணவர் இர்பான் சேலத்தில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இர்பான் கைது செய்யப்படவில்லை என சிபிசிஐடி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

மாணவர் இர்பான் வெளிநாட்டில் உள்ளதாகவும், அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சிபிசிஐடி ஐஜி சங்கர், நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசி மூலமாக விளக்கம் அளித்தார். 

இந்நிலையில், நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group