பத்தாம் வகுப்பு கணித பாடத்துக்கும் அகமதிப்பீடு முறை அமல்படுத்தி, 10 மதிப்பெண் வழங்க, தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, புதிய பாடத்திட்டத்தில் அதிக பாடக்கருத்துகள் இடம்பெற்றுள்ளன.உரிய அவகாசத்துக்குள், கருத்துரு, செய்முறை பகுதிகளை நடத்துவதில் சிரமம் நீடிப்பதால், பாடங்களை குறைக்க, ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தேர்வு முறையில் சில மாற்றங்கள் செய்யக்கோரி, இயக்குனரகத்துக்கு, கணித பட்டதாரி ஆசிரியர்கள் கடிதம் அனுப்பி வருகின்றனர். அதில், கணிதத்தேர்வில் 'பகுதி-ஈ', செய்முறை வடிவியல், வரைப்படங்கள் (கிராப்) குறித்து, 10 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம்பெறும்.
No comments:
Post a Comment