சிறுநீரக கல்: ஆரம்பமும் அறிகுறியும் பிரச்சனைகளும் தீர்வுகளும் - KALVISEITHI | கல்விச்செய்தி

Saturday 21 December 2019

சிறுநீரக கல்: ஆரம்பமும் அறிகுறியும் பிரச்சனைகளும் தீர்வுகளும்

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

உடலை சுத்திகரிக்கும் கருவி இருக்கிறது என்றால் அது சிறுநீரகப் பை தான். உடலில் இருக்கும் கழிவுகளை பிரித்து வெளியேற்றி உடலை சுத்தமாக அதாவது ஆரோக்கியமாக வைத்திருக்க உதவு கிறது. இதன் ஆரோக்கியம் பாதிக்கப்படும் போது உடலின் ஒட்டு மொத்த இயக்கமும் தடைபடும் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. அதற்கு முன் சிறுநீரக கல் உருவாக காரணம் என்ன? அறிகுறிகள் என்ன? தீர்வுகள் என்ன என்பதையும் பார்க்கலாம்.

அறிவோம்

உடலில் இருக்கும் உறுப்பில் எங்கு வேண்டுமானாலும் கல் உருவாகலாம். சிறுநீர் பை, சிறுநீரகம், இன்று பலரும் இந்த பிரச்சனையை எதிர்கொண்டிருக்கிறார்கள் இவ்வளவு ஏன் உங்கள் குடும்பத் தில் அக்கம் பக்கத்தில் உறவினர்கள் என்று உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இந்த பாதிப்பு இருக் கவே செய்யும் அளவுக்கு அதிக அளவு மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுவது இந்த பிரச்சனை தான் என்று மருத்துவர்களும் சொல்கிறார்கள். ஆய்வு ஒன்றில் இந்தியாவில் 80 இலட்சம் மக்கள் வரை இந்த பிரச்சனையை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

​சிறுநீரக பணி

ஒவ்வொருவருக்கும் இரண்டு சிறுநீரங்கள் உண்டு. தினசரி உடலில் வளர்சிதை மாற்றத்தின் போது உண்டாகும் கழிவுகளை இரத்தத்தில் இருந்து பிரித்தெடுத்து வெளியேற்றும் வேலையை செய்து வருகிறது. சுருக்கமாக சொல்வதாக இருந்தால் உடலில் இருக்கும் உப்பு சத்தை வடிகட்டி தேவையற் றதை வெளியேற்றுகிறது.

கழிவுகளை வெளியே அனுப்பும் போது உப்பு, வேதிப்பொருள் வெளியேறும். அதில் சமயங்களில் கழிவுகளிலிருக்கும் உப்பு சிறு துகள்களாக மாறி சிறுநீரகத்தில் தேங்கி விடுகிறது. பிறகு படிப்படி யாக கற்களாக படிந்து விடுகிறது. சில துகள் கல்லாக மாறி உறுப்பில் அடைப்பை ஏற்படுத்தி சிறு நீரகத்தின் பணியை பாதிக்கிறது.

​சிறுநீரக கல் உருவாக காரணம்

சிறுநீரகத்தில் பல்வேறு வேதி உப்புகள் உண்டு. உதாரணத்துக்கு கால்சியம் அக்ஸலேட், யூரிக் ஆஸிர், கால்சியம் பாஸ்பேட் போன்ற உப்புகள் அதிகமாக இருந்தால் அவை துகளாக மாறி கற்க ளாக மாறும்.

அதிகப்படியான உப்பு துகள் சிறுநீரகத்தில் தேங்கி விடும் போது சில துகள் தானாக கரைந்து வெளி யேறிவிடும். சில நேரங்களில் கல்கள் பெரிதாக அங்கேயே இருந்து வளர்ந்து பெரியதாகும். இன்னும் சிலருக்கு சிறுநீரகத்தில் இருந்து இறங்கி சிறுநீர்குழாயில் அடைத்து அறிகுறி காண்பிக்கும். இன்னும் சிலருக்கு மூத்திர பையில் வந்து தங்கி பிரச்சனகளை உண்டாக்கும்.

​சிறுநீரக கல் அளவு

பாதிப்பை விளைவிக்காத கல்லானது சிறிய அளவில் இருக்கும். இது அளவில் 5மி.மீருக்கு குறைவாக இருக்கும். சிலருக்கு புளியங்கொட்டை அளவு 5.8 மிமீ வரையிலும் வளரலாம். 1 செமீட்டருக்கு மேல் இருப்பவை தான் பெரிய கற்கள் ஆகும்.

ஸ்கல்லின் அளவு பொறுத்து வலியின் தீவிரம் இருக்கும். சிலருக்கு கல் மிகச்சிறிய அளவில் இருக் கும். ஆனால் வலியின் தீவிரம் அதிகமாகும். சிலருக்கு பெரிய கல் இருக்கும். ஆனால் வலி அதிக ரிக்காது.

சிறுநீர் பையில் இருக்கும் கல்லானது சிறுநீர்ப்பாதை வழியாக நகர்ந்து வெளியே செல்லும் போது பிரச்சனை தொடங்குகிறது. அப்படி செல்லும்பொது சிறுநீர் வெளியேறுவதை தடுக்கிறது. அப்போது தான் வலியை உண்டாக்குகிறது.

சிறுநீரக கல் ஒன்று கால்சியம் கல், கிருமித்தொற்று நிறைந்த ஸ்ட்ரூவெயிட் ஸ்டோன், அதிக அசை வம் சாப்பிடுவற்களுக்கு உண்டாவது யூரிக் ஆஸிட் ஸ்டோன், மற்றொன்று கல் உண்டு. ஆனால் இவை பெரும்பாலும் வருவதில்லை.

அறிகுறி

அறிகுறியே தெரியாத அளவுக்கு சிறுநீரகத்தில் இருக்கும் கல் ஆனது சிறுநீர்பாதையை வரும்போது வலி உண்டாகும். இந்த வலி மிக கடுமையாக இருக்கும் . முதுகுப்பகுதியில் இருந்து வலி பரவ தொடங்கும்.

முதுகுத்தண்டு அல்லது இடுப்பு வலியை உண்டாக்கி பிறப்புறுப்பு வரை வலியை கொடுக்கும். தாங்கமுடியாத இந்த வலியை பிரசவ வலியுடன் கூட ஒப்பிடமுடியாது. சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது சொட்டு சொட்டாக சிறுநீர் பிரியும். சிறுநீரில் கிருமித்தொற்றி பரவி காய்ச்சலை அதிகரிக் கும் உடலில் நீர்ச்சத்து குறைய தொடங்கும். காய்ச்சல், வாந்தி போன்றவை உண்டாகி மேலும் தீவிரமாக்கும்.

சிலருக்கு சிறுநீர் பிரியும் போது ரத்தம் கலந்து வெளியேறும், சிறுநீர் கழிக்கும் போது அல்லது முடித்தவுடன் தாங்கொணா எரிச்சல் உண்டாகும்.

காரணம் என்ன

போதிய தண்ணீர் அருந்தாமை தினமும் உடலுக்கு தேவையான அளவு தாகம் இல்லையென்றாலும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவதை அறிவோம். காரணம் சிறுநீரை வெளியேற்றும் போது கழிவுகள் தாராளமாக பிரித்தெடுக்க போதிய தண்ணீர் தேவைப் படுகிறது. அப்போது தண்ணீரின் அளவு குறையும் போது இயல்பாக சிறுநீரகத்தில் இருக்கும் உப்பு முழுமையாக வெளியேறாமல் மண் துகள்களாக அங்கேயே படிந்துவிடுகிறது. உடலில் தண்ணீர் இழப்பு ஏற்படும் போது கற்கள் உருவாவதும் இயல்பாகிறது.

​கால்சியம் அளவு

உடலுக்கு போதுமான கால்சியம் தேவை. கால்சியம் பற்றாக்குறை இருக்கும் போது உடலில் ஆரோக் கிய குறைபாடு உண்டாகும் என்பது போலவே கால்சியம் அதிகரிக்கும் போதும் கற்களாக படிய வாய்ப்புண்டு. உணவில் மட்டும் கால்சிய சத்து இல்லாமல் கால்சியம் மாத்திரைகளை அதிகம் எடுத்துகொள்பவர்களும் இந்த பிரச்சனை வர வாய்ப்புண்டு. காரணம் உடலில் கால்சியம் அளவை கட்டுப்படுத்தும் ஹார்மோன் சுரப்பியான பாராதைராய்டு குறைபாடே. இவை தவிர வீரியமான மருந்துகளை பயன்படுத்தும்போதும் இந்த பிரச்சனை உருவாக வாய்ப்புகள் அதிகமாகிறது.

​உணவு மற்றும் வாழ்க்கை முறை

அதிகம் இனிப்பு, புளிப்பு,உப்பு, காரம், மசாலா நிறைந்த உணவுகள், செயற்கை சுவையூட்டிகள், கோலா குளிர்பானங்கள்அனைத்துமே கேடு உடலுக்கு கேடுதரக்கூடியவை.. அதில் முக்கியமானது சிறுநீரககற்கள். இது உடல் பருமனையும் சத்தமில்லாமல் சிறுநீரகப்பையில் கற்களையும் உரு வாக்கிவிடுகிறது.மது பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கும் இந்த பிரச்சனை உண்டு.

வாழ்க்கை முறை இன்று எல்லோரும் குளிரூட்டப்பட்ட அறையில் தான் அதிக நேரம் தங்குகிறோம். இதுவும் கேடுதரக்கூடியது. மேலும் சிறுநீரை அவ்வபோது வெளியேற்றாமல் அடக்கி கொள்வதும் கற்களை உருவாக்கிவிடும்.

​சிகிச்சைக்கு முன்பு

அறிகுறிகளை வைத்து மருத்துவரை அணுகும் போது இரத்தபரிசோதனை செய்யப்படும். அப்போது சிறுநீரக கற்களை உருவாக்கும் கால்சியம், யூரிக் அமிலம் வெள்ளை அணுக்களில் இருக்கும் அள வை பார்ப்பார்கள். இதை பொறுத்து சிறுநீர் பரிசோதனை செய்யப்படும். அதில் வெளிவரும் கழிவுகள் மூலம் மருத்துவர் உஙளுக்கு சிகிச்சை அளிப்பார்.

அறிகுறிகள் தீவிரமாக இருக்கும் போது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் சோதனை மூலம் 90% வரை கற் களை அடையாளம் காணலாம். கற்கள் சிறுநீர் பாதையில் இருந்தால் சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்து கற்களின் தன்மையை அறிந்து சிகிச்சை அளிப்பார்கள்.

​சிகிச்சைக்கு பின்பு

சிறுநீரகத்தில் கற்களின் அளவுக்கேற்ப தண்ணீரின் மூலமாகவும் வெளியேற்றுவார்கள். கற்கள் பெரிய அளவில் இருந்தாலும் அதை எளிதாக எடுக்க பல்வேறு நவீன சிகிச்சைமுறைகள் வந்துவிட் டன என்பதால் பயப்படத்தேவையில்லை. ஆனால் சிகிச்சை முடிந்து கற்கள் முழுவதும் வெளியேற் றினாலும் மீண்டும் அவை வருவதற்கு வாய்ப்புண்டு. 50 சதவீதத்தினருக்கு இது மீண்டும் வருகிறது.

அதனால் சிறுநீரக கற்கள் பிரச்சனையிலிருந்து மீண்டு வந்தவர்கள் மீண்டும் இந்த பிரச்சனையை எதிர்கொள்ளாமல் இருக்கவும் சிறுநீரக கற்கள் வராமல் இருக்கவும் தினமும் தண்ணீரை 3 லிட்டர் வரை பருகுவது நல்லது என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது.

No comments:

Post a Comment

Join Our Telegram Group